Header Ads

test

பாரிய விபத்தொன்றை ஏற்படுத்திய தனியார் பேருந்து.!!!

பாரிய விபத்தொன்றை ஏற்படுத்திய தனியார் பேருந்து.!!!

அம்பாறை திருக்கோவில், தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை  தனியார் பேருந்தொன்று  கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் படுகாயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது -

பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கல் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கனரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும் பொத்துவிலில் இருந்து பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டையிழந்து மோதியே  இவ் விபத்து ஏற்பட்டதாக அறிய முடிகின்றது.

இவ் விபத்தில்  காயமடைந்தவர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து, இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

தனியார் பேருந்து மோதி கனரக வாகனம் சுமார் 15அடி தூரம் முன் தள்ளப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments