Header Ads

test

யாழ்.மட்டுவில்,சந்திரபுரம் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்.!!!

யாழ்.மட்டுவில்,சந்திரபுரம் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்.!!!

யாழ்.மட்டுவில்,சந்திரபுரம்  பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (04) அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நால்வர் அடங்கிய குழுவே குறித்த  தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
சம்பவம் இடம்பெற்ற  வீட்டு கேற், உந்துருளி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதால் அயலவர்கள் திரண்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது






No comments