Header Ads

test

"சில்ப அபிமாணி - 2019" கைப்பணி துறை போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.!!!

"சில்ப அபிமாணி - 2019" கைப்பணி துறை போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர்  ரிஷாட் பதியுதீன்.!!!

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால் நடாத்தப்படும் "சில்ப அபிமாணி - 2019" கைப்பணி துறை போட்டி மற்றும் கண்காட்சி, ஜனாதிபதி விருதுகள் சர்வதேச கைப்பணிகள் விழா இடம் பெற்றுவருகின்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வாது கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நிறுவனத்தின் தலைவர் ஹேஷானி போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ எச் எம் பௌசி, உலக அருங்கலைகள் பேரவையில் ஆசியாவுக்கான தலைவர் டாக்டர் கதா ஹிஜ்ஜாவி-கத்தூமி, இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் மொஹம்மட் ஸஈரி அமீரனி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










No comments