Header Ads

test

ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணித் தலைவரின் வங்குரோத்து அரசியல் - பா.உ.வியாழேந்திரன் சாடல்.!!!

ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அணித் தலைவரின் வங்குரோத்து அரசியல் - பா.உ.வியாழேந்திரன் சாடல்.!!!

கல்குடா சாராய தொழிற்சாலைக்கு ஆதரவாக  குரல் கொடுத்தவரும்
கடந்த காலம் முதல்  தமிழ் மக்களின் நியாய பூர்வமான போராட்டங்களையும், தம்மீதும் அபாண்டமான விமர்சனங்களையும்  சசிதரன் விரேஷ்வரன் என்பவர் வெளியிட்டு வந்ததாகவும்  எமது இணையத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது -

மத்திய வாங்கி ஊழலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும்  அலோசியஸ் அவர்களின் சாராய தொழிற்சாலைக்காக பா.உ. அவர்களுடன்  சக்தி எதிரொலி நிகழ்ச்சியில் காரசாரமான கருத்தாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும்  கோத்தபாயவுக்கு ஆதரவாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தை பிழையாக விமர்சித்ததாக ஊடக அறிக்கை ஒன்றையும்  வெளியிட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர், பா.உ. பொய் வதந்திகளை பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளதாகவும், இவ்வாறான குற்றங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருப்பில் இருக்கின்றபோது விமர்சனங்கள் எழத்தான் செய்யும்,இது மட்டுமல்லாமல் அன்று தொட்டு இன்று வரை முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகளுக்கு வாக்கு சேகரிப்பில் இடைத்தரகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

தற்போதுள்ள நிலையில் கிழக்கு தமிழர்களின் இருப்பை கருத்தில் கொண்டு கிழக்கிலுள்ள சில கட்சிகள், அமைப்புக்கள் நிச்சயமாக ஆதரவை யாரேனும் ஒரு வேட்பாளருக்கு வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஆதரிக்காத சந்தர்ப்பத்தில் மாற்று இன அரசியல் வாதிகளிடமிருந்து எஞ்சிருக்கும் எம் சமூகத்தை காப்பாற்ற முடியாது எனவும் நிபந்தனைகள் உடன் ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாட்டுக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments