Header Ads

test

யாழ்.மறவன்புலவில் மின் காற்றலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்!!!

யாழ்.மறவன்புலவில் மின் காற்றலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்!!!

யாழ்.தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு அண்மித்த பகுதியில்  மின் காற்றாலை அமைக்கப்படுவதற்க்கு  எதிராக, குறித்த பிரதேச மக்கள் கொட்டும் மழையிலும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டமானது  யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன்  வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்து கலந்துரையாடியதுடன்  யாழ்.மாவட்ட அரச அதிபர்,சாவகச்சேரி பிரதேச செயலர், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர்,சுற்றுச்சூழல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலரை அழைத்து ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

No comments