Header Ads

test

முல்லை - நீராவிப்பிட்டி விவகாரம் தொடர்பில் பிக்குகளை சட்டத்தரணிகள் அவமதித்ததாலேயே குழப்பம் - கோத்தபாய ராஜபக்ச.!!!

முல்லை - நீராவிப்பிட்டி விவகாரம் தொடர்பில் பிக்குகளை சட்டத்தரணிகள் அவமதித்ததாலேயே குழப்பம் - கோத்தபாய ராஜபக்ச.!!!

எமது நாட்டில் பிக்குகளுக்கு என தனி கெளரவம் உண்டு.அக் கெளரவத்தை யாரும் அவமதிக்க முடியாது.இவ்வாறு அவமதிக்கும் வகையில் இனவாத அரசியல் வாதிகளின் பின்புலத்திலிருந்து செயற்படும் சில சட்டத்தரணிகளாலேயே முல்லத்தீவில் களேபரம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் இறந்துபோன விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலத்தை பொது இடத்தில் எரியூட்டுவதற்காக பிக்குகள் ஒரு இடத்தை தெரிவு செய்வதாக தீர்மானித்திருந்தார்கள்.
இருந்தும் சில குழப்பவாத அரசியல்வாதிகளின் பின்புலத்தில் செயற்படுபவர்களாலேயே இக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணிகளே மக்களை ஒன்று கூட்டி பிரச்சினையை ஊதிப்பெருப்பித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பிக்குகளை அவமதிக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments