Header Ads

test

நீதி மன்ற உத்தரவை அவமதித்துள்ள பெளத்த மத குருமார்கள் - முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மத துறவியின் உடலம் தகனம் தொடர்பானது.!!!

நீதி மன்ற உத்தரவை அவமதித்து பெளத்த மத துறவியின் உடலம் தகனம் - முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சம்பவம் !!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணான முறையில் தங்கியிருந்த பெளத்த மத துறவி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து உடலத்தை ஆலய வளாகத்தினுள் புதைப்பதற்கு பலர் அழுத்தங்களை பிரயோகித்து  வந்தற்கமைவாக குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

இதற்கமைவாக பெருமளவான சிங்கள மக்கள் பெளத்த மத துறவியின் உடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள்ளே அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததுடன் அப் பகுதியில் குடியிருந்த தமிழ் மக்களுடன் கருத்து முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -
இவ் விடயம் நீதி மன்றத்துக்கு சென்றதன்  அடிப்படையில்,  குறித்த உடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு அண்மையாகவுமுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதி மன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் ஆலயத்தின் தீர்த்த கேணி பகுதியில் குறித்த உடலத்தை தகனம் செய்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் எவரும் நீதி மன்ற செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




No comments