Header Ads

test

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே பெறப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.!!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே பெறப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.!!!



கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி வலுத்து வருவதால் அவர்களால் முறையாகவும் சரியான நேரத்திலும் வேட்பாளரை அறிவிக்க முடியாதிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு மாற்றமும் அதில் மேற்கொள்ளப்படாது என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

No comments