Header Ads

test

யாழில் இளைஞன் மீது பொலிஸாரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.!!!

யாழில்  இளைஞன் மீது பொலிஸாரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.!!!


மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் மீதே பொலிஸார் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலை முடித்து வீடு திரும்பிய இளைஞன் வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளை, வீதியால் வந்த போக்குவரத்து பொலிஸார் மூவர் இளைஞனை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இளைஞன் சென்றுள்ளார்.
எனினும் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






No comments