lவட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வவுனியா சேமமடு சண்முகானந்த மகாவித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினார் கெளரவ சிவசக்தி ஆனந்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளார் திரு.ஜோன் குயின்ரஸ், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினார் சிவராஜா,வவுனியா தெற்குவலய ஆசிரிய வள மத்திய நிலைய முகாமையாளர் திரு பரஞ்சோதி மற்றும் வவுனியா வடக்கு ஆசிரிய வள மத்திய நிலைய முகாமையாளர் திருஜெயசந்திரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment