Header Ads

test

கி.பி.13 ம் நூற்றாண்டுக்குரிய இந்து ஆலயம் அழிபாடுகளுடன் மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.!!!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பிரதேசத்தில் (16.07.2019) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர் மற்றும் மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை கி.பி.13ம் நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் என கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும்  அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி, சிங்கள இலக்கியத்தில் வரும் "குருந்தி" என்ற இடமே இதுவாக இருக்கலாம் என பேராசிரியரால் கூறப்பட்டன.

 "சாவகனுக்கும்" இவ்விடத்திற்கும் தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளன.

சுதை மற்றும் செங்கற்களாலும் கட்டப்பட்ட இவ்  ஆலயமாதத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம், பலிபீடம் ஆகியனவும் சுவர்களில் தூண்களும் காணப்படுகின்றன.











No comments